காலி - கராபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இரண்டாவது கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, காலி கராபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
44 வயதான பெண், சில நாட்களுக்கு முன்பு மயக்க நிலையில் இருந்தபோது குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்தப் பெண் சுமார் 11 நாட்கள் எக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.