எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட்கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்,
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.