பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மக்களின் உயிர்களை பலி கொடுக்க வேண்டாம்! -ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மக்களின் உயிர்களை பலி கொடுக்க வேண்டாம்! -ரணில்



கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த வருடம் 30 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு புதிய திட்டம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.


முதலாவது டோஸ் மருந்தினை பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்க வேண்டியது அவசியம் இதற்கான மருந்தினை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்குகின்றது ஆனால் அனைத்து மக்களுக்கும் அது கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள ரணில், பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பொதுமக்களின் உயிர்களை பலிகொடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த நவம்பரில் தடுப்பூசி திட்டத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசிக்கு பிரச்சினை வந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.