இலங்கை அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழினுப்பக்குழு சமர்ப்பித்த கண்டறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலக சுகாதார மையம், தமது கண்டறிதலில், ஆறு மாதங்களில் கூட அஸ்ட்ராசெனெகா இரண்டாவது அளவைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

இந்தநிலையில் அதுவரை காலப்பகுதிக்கு அஸ்ட்ராசெனெகாவின் முதல் அளவு நோய் எதிர்ப்பு திறனைக்கொண்டிருப்பதாக என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுல்லே கூறியுள்ளார்.

இலங்கை ஆரம்பத்தில் 500,000 குப்பிகள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து இலவசமாகப் பெற்றது, மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.

இரண்டாவது அளவாக பயன்படுத்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சுமார் 350,000 அளவுகளை அரசாங்கம் வைத்திருந்தது. அதில் ஒரு பகுதியை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும், இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் இரண்டாவது அளவை வழங்க பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் ஏற்கனவே முதலாவது அளவு கிடைத்தவர்களுக்கு இரண்டாவது அளவை செலுத்த இன்னும் 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.