நாமலுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் என்ன சம்பந்தம்? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாமலுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் என்ன சம்பந்தம்? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்!


நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்னவென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேள்வி எழுப்பினர்.


கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  இதனை கூறினார். 


அவர் அங்கு மேலும் கூறுகையில்,


நாட்டில் தடுப்பூசிகளையேற்றும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாகுபாடு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி அனுப்புவதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டிற்கும் என்ன தொடர்புகள் இருக்கின்றது என தெரியவில்லை.


அதுமட்டுமல்ல நாடளாவிய ரீதியில் பயணகட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. நாட்டில் எவருக்குமே வீதிகளில் செல்ல முடியாது என கூறப்படுகின்ற வேளையில் அவருக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லையா என்பதை அரசாங்கத்திடம் கேட்கிறேன். 


நாளாந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் இவர் மாத்திரம் நடமாடுவது அனுமதிக்கப்படக்கூடியதா?விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்.


மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற காரணி குறித்து எந்தவித அறிவிப்பும் எமக்கு கிடைக்கவில்லை. செய்திகளில் இந்த காரணிகளை எம்மால் பார்க்க முடிந்தது, உண்மையில் இப்போதுள்ள நாட்டின் நிலைமையில் வாகனங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. மக்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கவே முடியாத நிலையில் வாகனம் கொள்வனவு எதற்கு. சாதாராண சூழலில் இவற்றை செய்வதில் எம்மத்தியில் எதிர்ப்பில்லை, ஆனால் இப்போது அவசியமில்லை என்றார்.


ஆர்.யசி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.