நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக திடீர் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆகவே பொது மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பமடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவைக்கு மேலதிகமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.