சிராஜ் நகரில் இரண்டு வயது குழந்தை நீரோடையில் விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிராஜ் நகரில் இரண்டு வயது குழந்தை நீரோடையில் விழுந்து மரணம்!


திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் விழுந்து இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம், இன்று (24) இடம்பெற்றுள்ளது.


சிராஜ் நகர், மயில் தீவு பகுதியைச் சேர்ந்த ஏ. அகிலா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குழந்தையைக் காணவில்லை என சுமார் அரை மணி நேரம் தாய் தேடிய நிலையில், வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.