இலங்கையில் மேலும் 2,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதில் 51 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும், ஏனைய அனைவரும் புதுவருட கொரொனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று (10) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.