தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 2021 மே 23 திகதி ஞாயிறு காலை 9:00 மணிக்கு Akkaraipattu Inspiring youths அமைப்பின் அங்கத்தவரால் மர நடுகை நிகழ்வு ஒன்று சுகாதார விதிமுறையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக பொது இடங்களில் ஒன்று கூடாமல் தங்களுடைய வீடுகளிலும் வீடு சார்ந்த பகுதிகளிலும் மர நடுகை செய்து வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது
மேலும் இத்திட்டத்திற்கு ஆதரவாக inspiring youths அமைப்பின் தலைவர் M.A.றுஷைத் அலி, செயலாளர் J.M சாஜித், உப தலைவர் S.A.அஸ்பக், ஆலோசகர் மற்றும் கிராம உத்தியோகத்தருமான ரிஜான், வெளிக்கல செயற்பாடு A.C.M. றிப்னாஸ், ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை அவர்களுடைய வீடுகளில் இருந்த வண்ணம் வழங்கி இருந்தார்கள்,
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் முகமாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த செயற்திட்டத்திற்காக ஆதரவுகளை வழங்கிய அனைவருக்கும் inspiring Youths அமைப்பின் சார்பான நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
ஆரோக்கியமான இளைஞர்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவோம்.
மண்ணையும் கல்லையும் தாண்டியே மண்னை முத்தமிட்டு வரும் செடியின் வளர்ச்சி
மனித மிருகங்களின் சூழ்ச்சியை தாண்டியே சில மனிதர்களின் வளர்ச்சி!
மதிக்காவிட்டாலும் மிதிக்காதீர்கள்.
Inspiring youths
Akkaraipattu
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன சூழல் பாதுகாப்பு செயலாளர்
-M.A றுஷைத் அலி