இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் நாளைக்கு 10 ஆயிரமாக உயரலாம்! -சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் நாளைக்கு 10 ஆயிரமாக உயரலாம்! -சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே


நாட்டு மக்கள் கொரொனா சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஆயிரமாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் நபர் ஒருவரினால் மேலும் 4 பேருக்கு வைரஸ் பரப்பினால், அல்லது மக்கள் வைரஸ் குறித்து அவதானமின்றி செயற்பாட்டால் இந்த இலக்கை எட்ட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டினுள் இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் எதிர்வரும் 2 வாரங்களில் அந்த நிலைமை கை நழுவி போய்விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம். முகக் கவசத்தை உரிய முறையில் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.