தென் மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வௌியான ஊடக செய்தி தொடர்பில் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் நோக்கம் உண்மையை வௌிப்படுத்துவதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய அணி வீரர்களின் ஒழுக்கம் கண்டிப்பாக கண்காணிக்கப்படும் என்றும், ஒழுங்கு அடிப்படையில் தவறான நடத்தை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக, வீரர்களுக்கு பொருந்தக்கூடிய ஒரு புதிய நடத்தை விதி இலங்கை கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டுள்ளது, இது புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் காலத்திலிருந்து செயல்படுத்தப்படும்.
அடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியத் தேர்தலில் புதிய குழு தேர்ந்தெடுக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டை தற்போது நிர்வாகக் குழு நிர்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.