முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"நான் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஒரு அரசியல் முடிவை எடுத்து வருகிறேன். மே முதல் வாரத்தில், நான் அரசாங்கத்திற்கு ஒரு சவாலை முன்வைப்பேன், அவர்கள் அதைச் செய்தால், எனது முதுகெலும்பு என்ன என்பதை மீண்டும் காண்பிப்பேன்" என்று எம்.பி. ஹரின் பெர்னாண்டோ நேற்று கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது தேசிய பட்டியல் எம்.பி. பதவியை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிய வருகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கக்கு சிறப்பு மன்னிப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசிடம் கோருவார், பின்னர் அவர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கும் பொருட்டு தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார்.