பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்!


பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தானது வீதியின் தன்மையினால் நிகழவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 20 ஆம் திகதி பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து இடம்பெற்ற மறுதினம் அது தொடர்பில் ஆராய்வதற்கு குறித்த மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய விசாரணை குழுவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்து இடம்பெறுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, பாரவூர்தியின் சாரதி மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோரே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் எனவும் வீதி பாதுகாப்பு தொடர்பான பயற்சியாளரான டபிள்யூ. ஏ.வீரதுங்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.