வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவர்களினது கொரொனா தொற்று வீதம் அதிகரித்து வருவதால் இலங்கைக்குள் வருவது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் இன்று (17) தெரிவித்துள்ளது.
"நாட்டுக்குள் வருகை தருபவர்களில் கொரொனா தொற்று அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்" என்று தொற்றுநோயியல் பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களில் வெளிநாட்டு திரும்பியவர்களில் 120 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.