புலம்பெயர் விடுதலைப்புலிகளே இலங்கை மீது விசாரணை கோருகின்றனர்! -பங்களாதேஷ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலம்பெயர் விடுதலைப்புலிகளே இலங்கை மீது விசாரணை கோருகின்றனர்! -பங்களாதேஷ்


வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி-8 மாநாடு தொடர்பில் நேற்று (01) நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன.

அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதேஷ் பின்பற்றுகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து தமிழர்களுக்கு ஒரு சுயாதீன நிலத்துக்காகப் போராடிய, போர்க்குணம் மிக்க, பிரிவினைவாத குழுவே தமிழீழ விடுதலைப்புலிகள்.

விடுதலைப்புலிகள் பயிற்சிபெற்ற இராணுவம் மற்றும் கடற்படைகளைக் கொண்டிருந்தது. அவ்வாறாயின் அது ஒரு போராட்டக்குழு.

விடுதலைப்புலிகளின் அதிகமான உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இப்போது, இதுபோன்ற விசாரணைகளுக்கான கோரிக்கைகளையும் அவர்களே முன்வைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.