எச்சரிக்கை - நாட்டில் தொலைபேசி பயனர்களுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை - நாட்டில் தொலைபேசி பயனர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலி தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மோசடியான முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பிலுள்ள முன்னணி வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய குறித்த குழுவினர் முயற்சிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களைப் போன்று போலி குரல் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த போலி குரல் பதிவுகளை நம்பி, மீள தொடர்புகளை ஏற்படுத்திய வர்த்தகர்கள் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இரண்டு முன்னணி திறன்பேசி விற்பனை நிலையங்களில் இருந்து 47 இலட்சம் மற்றும் 29 இலட்சம் ரூபா பெறுமதியான திறன்பேசிகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி போலி காசோலைகளை வழங்கியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆகவே, இவ்வாறு போலியான மோசடிகளின் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.