பேச்சு, கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக் கொள்ளப்போவதில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சில குழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கி வருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.