சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல் பரப்புவோருக்கு பாடம் புகட்ட சட்ட சீர்திருத்தங்களை உருவாக்கி வருகிறோம்! -நீதியமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல் பரப்புவோருக்கு பாடம் புகட்ட சட்ட சீர்திருத்தங்களை உருவாக்கி வருகிறோம்! -நீதியமைச்சர்


பேச்சு, கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக் கொள்ளப்போவதில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (18) செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சில குழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கி வருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.