மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைய தினம் (27) திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது .
அதன்படி நாளைய தினம் முதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி வரை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது .
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு 0112 677 877 எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறும் போக்குவரத்து திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது .