நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்! -ஓமல்பே சோபித தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்! -ஓமல்பே சோபித தேரர்


தற்கொலை தாக்குதல் நடத்த உறுதிமொழி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சமூகத்தில்  இருக்கலாம் என ஓமல்பே சோபித தேரர் கூறினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு இன்று (21) கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே தேரர் இதனைத் தெரிவித்தார்.


அந்த தீவிரவாதிகளின் இலக்கை அடைந்துகொள்ள அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றிக்கொள்ள எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள் என்ற அச்சம் எம்மிடம் உள்ளது.


விகாரைகளில், கோவில்களில், தேவாலயங்களில் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்வார்களா என்ற சந்தேகம் எம்மிடம் உள்ளது. அந்த சந்தேகத்தை இல்லாமல் செய்ய வேண்டிய கடமை தற்போதய  அரசுக்கு உள்ளது.


தீவிரவாதம் பலவிதமான வடிவங்களில் வரலாம். அதன் ஒரு வடிவம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல். மக்களுக்கு விஷம் அடங்கிய உணவுகளை வழங்குவது தீவிரவாதத்தின் மற்றுமொறு வடிவம். மேலும் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழையும் இன்று நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.