அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் திட்டமிடப்பட்ட விவாதம் தொடர்பாக அரசாங்கமும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடும் வாத பரிமாற்றத்தில் ஈடுபட்டதை அடுத்து இன்று பாராளுமன்றத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆரம்பத்தில் சபாநாயகரிடம் நாளை மற்றும் நாளை மறுநாள் திட்டமிடப்பட்ட விவாதத்தைத் தொடங்க அனுமதிக்குமாறு கோரியது, அதைத் தொடர்ந்து ஒரு சூடான வாத பரிமாற்றம் ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் லட்சுமன் கிரியெல்ல, அமைச்சர் தினேஷ் குணவர்தன, மற்றும் ரவூப் ஹக்கீம் இடையிலே இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.
பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், நாடாளுமன்ற நிகழ்வுகள் அனைத்தும் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.