- இலங்கையில் நாளொன்றுக்கு பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது. , 1,096 கொரோனா தொற்றாளர்கள் இன்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- 279 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சையின் பின் இன்று மருத்துவமனையில் வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94,856 ஆக உயர்ந்துள்ளது.
- தற்போதைய கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகரி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
- ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா-ஜெனெகா கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸ் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு நாளை முதல் வழங்கப்படவுள்ளன.
- இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
- மாத்தளை மாவட்டத்தில் இரு கிராம அலுவலக பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.
- கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பொதுச் சேவையை இயக்குவதற்காக வீட்டடிக் இருந்து பணி புரியும் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான சுற்றரிக்கையினை பொது நிர்வாக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு இதுவரை தடை விதிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 250 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.
யாழ் நியூஸ் - எம் ஐ மொஹமட்