போலி நாணயத்தாள்; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி நாணயத்தாள்; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் காணப்படுவதால் அது தொடர்பில் அதிக விழிப்புடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


ஐயாயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதால், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக பொலிஸார் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


$ads={1}


அக்கரைப்பற்று - ஒலுவில் பகுதிகளில், 124 போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


எனவே, நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது அதிக அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.