துண்டு துண்டாக சிதறிக் கிடந்த என மக்களின் உடல்களை நான் நேரில் பார்த்தேன்! -கார்தினல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துண்டு துண்டாக சிதறிக் கிடந்த என மக்களின் உடல்களை நான் நேரில் பார்த்தேன்! -கார்தினல்

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட எமது மக்களின் துண்டுத் துண்டுடாக சிதறிக் கிடந்த உடல்களை நான் நேரில் பார்த்திருந்தேன். அதனை அரசியல்வாதிகள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது என கொழும்பு பேராயர் கார்தினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முழுமையடையாத ஒன்றாகும்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட எமது மக்களின் துண்டுத் துண்டுடாக சிதறிக்கிடந்த உடல்களை நான் நேரில் பார்த்திருந்தேன். அதனை அரசியல்வாதிகள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது.

$ads={1}

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு முடிந்தவரை விசாரித்திருக்கலாம், ஆனால் அது ஒரு முழுமையான அறிக்கை அல்ல. இங்கே சில அடிப்படை உண்மைகள் உள்ளன.

ஆனால் இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி அதற்கு நிதியளித்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே, இந்த ஆணையத்தின் அறிக்கையில் நாங்கள் திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.