சுரங்கத்தின் இருளில் சிக்கி பரிதாபமாக இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுரங்கத்தின் இருளில் சிக்கி பரிதாபமாக இருவர் பலி!

அவிசாவெல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வெரலுப்பிட்டிய பிரதேசத்தில் இரத்தின சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார். 

 இந்த சம்பவம் நேற்று (27) இரவு 7.00 மணியளவில் பதிவாகியுள்ளது.

பலத்த மழை காரணமாக சுரங்கத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து,  சுரங்கத்திற்குள் சென்ற இரண்டு நபர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கிய இருவரின் சடலங்களும் அவிசாவெல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறந்தவர்கள் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.