மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு; அசாத் சாலியும் தொடர்பு? -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு; அசாத் சாலியும் தொடர்பு? -சரத் வீரசேகர


மாவனெல்லையில் புத்தர் சிலை
சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் அசாத் சாலியும் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (17) ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அசாத் சாலிக்கு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஷரீஆ சட்டம் மற்றும் அரச சட்டம் பற்றிய அசாத் சாலியின் சமீபத்திய அறிக்கைகள் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடும் மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.