கண்டியில் கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த பாடசாலை மாணவர் உயிரிழப்பு!


கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த நிலையில் இருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக குறித்த மாணவர் கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மாணவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மொரவக்க மற்றும் தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலும் 30க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (16) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைய மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

மூலம் - மடவளை நியூஸ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.