ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை படித்ததன் பின்னர், அதிலுள்ள குறைபாடுகளை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுவதற்கு தாம் தயாரென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
$ads={1}
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.