16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பராமரிப்பு இல்லத்தின் பணியாளருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பராமரிப்பு இல்லத்தின் பணியாளருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை!


16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக தனியார் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புறக்கோட்டையைச் சேர்ந்த குறித்த நபருக்கே நீதிமன்றம் இவ்வாறு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்ய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


$ads={1}

இதன்போது நீதிமன்றம் சந்தேக நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் 10,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 250,000 ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறும் அதிரடி உத்தரவிட்டது.


அத்துடன் இழப்பீடு வழங்க சந்தேக நபர் தவறினால் தண்டனைக் காலத்திற்கு மேலதிகமாக 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.