மோடியின் பங்களாதேஷ் விஜயம்; கலவரத்தில் 11 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோடியின் பங்களாதேஷ் விஜயம்; கலவரத்தில் 11 பேர் பலி!


பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பினார். 


மோடி வருகைக்கு பங்களாதேஷிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி பங்களாதேஷுக்கு வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 


இந்தியாவில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் கடும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.


போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டபோது பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர்ப்புகை பிரயோகம் என போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் இதில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.