காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிப்பு!


மீகொட - வெலிசெனவத்த பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக மீகொட பொலிஸ் நிலையம்  தெரிவித்துள்ளது.


முன்னதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை, இந்த சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை கோரியிருந்தது.


சிறுமியின் தாய், கணவரை விவாகரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். அங்கு அவர் மறுமணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து சிறுமியின் தந்தை 2020 நவம்பரில் இறந்துவிட்டார், இந்நிலையில், அவரது தாத்தா, பாட்டி மற்றும் மாமா ஆகியோர் சிறுமியை பராமரித்து வந்தனர்.


எனினும், குழந்தையின் தாய் இலங்கைக்குத் திரும்பி வந்ததாகவும், குழந்தையை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்காக சட்டப்பூர்வ உதவியைப் பெற முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போதே சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.