மரணித்த நிலையில் இருக்கும் பலரை தான் எழுப்பியுள்ளதாக இலங்கையில் பார்ன் அகெய்ன் (Born Again) பிரிவின் தலைவரான பிஷப் டபிள்யூ நிசங்க தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும்பாலான போதகர்கள் பொய் சொல்கின்றாரகள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றியும் வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தான் பொதுமக்களை தனது மதத்திற்கு ஒருபோதும் மாற்றுவதில்லை என்றும் மக்களுக்கு பணத்தை வழங்குவதும் இல்லை என்றும் மேலும் குறிப்பிட்டார்.
விக்டர் ரத்நாயக்க சம்பவம் குறித்து தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், ஆனால் அவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவால் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
அவரது முழு நேர்காணலினையும் கீழே பார்வையிடலாம்.