WATCH: O/L கூட சித்தியடையாதவர்கள் எப்படி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு தீர்ப்பு சொல்ல முடியும்? கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: O/L கூட சித்தியடையாதவர்கள் எப்படி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு தீர்ப்பு சொல்ல முடியும்? கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேள்வி!


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.


இதில் கொழும்பு பேராயரும் கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் ஆணைக்குழுவின் அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த பட்சம் சாதாரண தரம் கூட சித்தியடையாத குழுவினால் இது தொடர்பில்  ஆராய்ந்து முடிவெடுக்க நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.