ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
இதில் கொழும்பு பேராயரும் கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஆணைக்குழுவின் அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த பட்சம் சாதாரண தரம் கூட சித்தியடையாத குழுவினால் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.