பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வீடொன்றில் புகுந்த குழுவொன்று குறித்த வீட்டில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (23) காலை பியகம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 58,000 ரூபா பணமும் 4 கையடக்க தொலைப்பேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்ளையர்கள் சிவில் உடையில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 58,000 ரூபா பணமும் 4 கையடக்க தொலைப்பேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்ளையர்கள் சிவில் உடையில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.