நாட்டின் சுதந்திர தினம் அன்று, வட கிழக்கில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் தவறானது! -S.B திஸாநாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் சுதந்திர தினம் அன்று, வட கிழக்கில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் தவறானது! -S.B திஸாநாயக்க

SB Dissanayake

எமது நாட்டின் சுதந்திர தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தவறான செயற்பாடாகும். தமிழ் அரசியல்வாதிகள் இல்லாத பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.


தெற்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் வடக்கிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்கள் தவாறன செயற்பாடாகும்.


பிரித்தானிய காலணித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் முன்னின்று செயற்பட்டார்கள். ஆகவே இலங்கை பிரஜைகள் அனைவரும் இன, மத மற்றும் மொழி பேதமின்றி சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.தெற்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச சேவையில் திறமைக்கேற்ப முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.


30 வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தம் முடிவடைந்த பிறகு குறுகிய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்டன.


சர்வதே அரங்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.


இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்ற விம்பத்தை தோற்றுவித்து அதில் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமை மாகாண சபை தேர்தல் ஊடாக வழங்கப்பட்டன. அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் அரசியல்வாதிகளும் கடந்த அரசாங்கத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை.


பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தங்களுக்கு தேவையான பிரதிநிதிகளை தெரிவு செய்துக் கொள்வார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என்றார்.


-இராஜதுரை ஹஷான்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.