இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்குமாறு, நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல் இன்று (23) இடம்பெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முறை காணொளி ஊடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20 ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்குமாறு, நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டது.
$ads={1}
சர்வதேச உறவுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானம் பல்வேறு நாடுகள் இணைந்த கூட்டுக் குழுவினால் முன்வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மாண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனம் செய்வதை இடைநிறுத்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தத்தை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.