கொரோனா ஜனாஸா அடக்கத்தில் பின்னடைவு? சுகாதார தரப்பு சற்று முன்னர் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஜனாஸா அடக்கத்தில் பின்னடைவு? சுகாதார தரப்பு சற்று முன்னர் விடுத்துள்ள அறிவிப்பு!


உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதன் பின்னரே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் இன்றைய தினம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மேலும், சடலங்களை அடக்கம் செய்வதற்கு தேவையான இடம் மற்றும் அங்கு காணப்படக்கூடிய நீரின் தன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்த வழிகாட்டல்களில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், குறித்த விடயம் சேர்க்கப்பட்டதன் பின்னரே, சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் பூரணப்படுத்தப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் உள்ளடங்கிய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணிக்கு இந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={1}


மேலும், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் அனுமதி கிடைக்கும் வரை, சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என, அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், அவ்வாறு யாரையேனும் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டால் குறித்த சடலங்களை குளிரூட்டி அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.