உறக்க நிலையில் இருந்த நபரை யானை தாக்கி மரணம்! கஹடகஸ்திகிலிய பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உறக்க நிலையில் இருந்த நபரை யானை தாக்கி மரணம்! கஹடகஸ்திகிலிய பகுதியில் சம்பவம்!


கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் நேற்றிரவு (06) 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை - கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சாகுல் ஹமீட் நௌபர் எனும் நபர் என தெரிய வருகின்றது.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


முக்கிரியாவ பகுதியில் வயல் காவலுக்காக இரண்டு பேர் சென்று உயரமான குடிசையில் தங்கியிருந்த போது அப்பகுதிற்கு தனது குட்டியுடன் வந்த யானை அந்த உயரமான குடிசையினை இழுத்ததால் அங்கு தங்கியிருந்தவர்கள் கீழே விழுந்ததில் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றதாகவும் தெரியவருகின்றது.


உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


-முஹம்மட் ஹாசில்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.