கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் நிபந்தனைகளுடன் நாளை திறக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் நிபந்தனைகளுடன் நாளை திறக்க அனுமதி!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கம்பஹா நகரில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (22) முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கம்பஹா நகரில் உள்ள பொது சந்தை மற்றும் அதனை அண்மித்த வர்த்தக நிலையங்கள் என்பன திறக்கப்படும் என கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபர்கள், நாளை முதல் தமது வர்த்தக நிலையங்களை திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={1}


அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நபர்கள், தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என, கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


கம்பஹா பொது சந்தையுடன் தொடர்புடைய 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 08 ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.