இலங்கையில் எதிர்வரும் காதலர்தின நிகழ்வுக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் எதிர்வரும் காதலர்தின நிகழ்வுக்கு தடை!

எதிர்வரும் 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சுகாதார பிரிவின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்வுக்கு வருகைத் தந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.