தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சைவழி பேரணியில் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அழைப்பாணை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் பொலிஸாரினால் இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், எந்த விதத்தில் நீதிமன்ற தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது எவ்வாறு என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.