இரத்தினபுரி பகுதியில் முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு! அடக்கமா? தகனமா? குழப்பத்தில் சுகாதார பிரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்தினபுரி பகுதியில் முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு! அடக்கமா? தகனமா? குழப்பத்தில் சுகாதார பிரிவு!

corona-death-srilanka-yazhnews

கொரோனா தொற்று காரணமாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலத்தை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பதில் சுகாதார பிரிவு குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரத்தினபுரி − இறக்குவானை நகரில் இந்த கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், குறித்த முஸ்லிம் இளைஞர் உயிரிழந்துள்ளார்.


வர்த்தமானி மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் இதுவரை வெளியிடப்படவில்லை.


$ads={1}


இந்நிலையில், குறித்த உடலை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தம்மால் தீர்மானமொன்றை எட்ட முடியாதுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இறக்குவானையில் கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.