ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த ரிஷாம் மரூஸ் மீது தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த ரிஷாம் மரூஸ் மீது தாக்குதல்!


ஈஸ்டர் ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரிஷாம் மரூஸ் என்கிற நபரே இவ்வாறு காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் நேற்று (08) இரவு சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்த வைத்தியசாலையின் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை – கல்கிரியாகம பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த நபரின் வீட்டிற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதோடு 15 பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.