கொரோனா - அண்மையில் மருத்துவமனையில் திடீரென மரணித்த பெண் - மருத்துவமனையில் அப்படி என்ன தான் நடந்தது? வெடிக்கும் சர்ச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா - அண்மையில் மருத்துவமனையில் திடீரென மரணித்த பெண் - மருத்துவமனையில் அப்படி என்ன தான் நடந்தது? வெடிக்கும் சர்ச்சை!

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவானது.

அவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் மரணம் தொடர்பில் சுகாதார பரிசோதர்களின் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவையின் பலவீனமே மரணத்திற்கு காரணம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

“சிகிச்சை நிலையத்தில் 7 நாட்கள் இருந்த பெண் கடந்த 15ஆம் திகதி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த பெண் 16ஆம் திகதி மாலை மீண்டும் சுகயீனமடைந்துள்ளார்.

1990 என்ற அம்பியுலன்ஸ் ஊடாக பதுளை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் நோயாளி ஆபத்தான நிலைமையில் இருந்தமையினால் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்காமல் ஒரு மணித்தியாலம் நோயாளியை வைத்திருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சுகாதார பிரிவின் குறைப்பாடுகள் காரணமாகவே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த தொற்றாளர் 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு செல்லும் போது நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என்பது சிக்கலுக்குரிய விடயமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.