நாட்டில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 1,400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரொனா பரவலை தொடர்ந்து சுகாதாரத்துறை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பின்பற்ற வேண்டிய பல சுகாதார பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியது.
கொரொனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2020 அக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழின் விதிகளுக்கு இணங்க பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பு குறித்து பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கூட்டாக நடவடிக்கைகளை நடத்தியுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி கொரோனா விதிமுறைகளை பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.