சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை - பச்சை மிளகாய் ரூ. 1,000 ஐ கடந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை - பச்சை மிளகாய் ரூ. 1,000 ஐ கடந்தது!

ஹட்டன் நகரில் பச்சை மிளகாயின் விலை கிலோவொன்றுக்கு ரூ.1000 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்வ்டைந்த காரணத்தினால் குறித்த பகுதியில் உள்ள நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் சந்தை பச்சை மிளகாயின் கிலோவொன்றிற்கான விலை ரூ.1,000 ஆகவும், கறி மிளகாய் கிலோவொன்றின் விலை ரூ.500 முதல் 550 ஆகவும், பூசணிக்காய் கிலோவொன்றின் விலை ரூ.240 முதல் 250 ஆகவும், பாகற்காய் கிலோவொன்றின் விலை ரூ. 350 முதல் 370 ஆகவும், கரட், கத்திரிக்காய், வெண்டிக்காய் ஆகியவற்றின் கிலோவொன்றிற்கான விலை ரூ. 220 முதல் 260 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இது தவிர, போஞ்சி, லீக்ஸ், கோவா போன்ற காய்கறிகளும் கிலோவொன்றிற்கு ரூ .180 முதல் ரூ. 220 அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து காய்கறி விவசாயிகள் கூறுகையில், இந்த நாட்களில் காய்கறிகளின் மொத்த விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், விற்பனையிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டும் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.