பஸ்பாகேகொரலே சுகாதார பிரிவினரால் நிர்வகிக்கப்படும் நாவலப்பிட்டிய வெஸ்டோல் தமிழ் மகா வித்யாலயாத்தின் ஆறு மாணவர்கள் மற்றும் அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 நபர்களும் நேற்று (13) கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக பொது சுகாதார ஆய்வாளர் சிண்டிரி மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 9 ஆம் தேதி 15 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். இதனை தொடர்ந்து தரம் 7 மற்றும் 9 இல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள் உட்பட நெருங்கிய தொடர்பில் இருந்த 32 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் சோதனை அறிக்கையின்படி, அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானவர்கள் நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹால், பாத் கோபிள் மற்றும் டெம்பிள்ஸ்டோ பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த மாதம் 9 ஆம் தேதி 15 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். இதனை தொடர்ந்து தரம் 7 மற்றும் 9 இல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள் உட்பட நெருங்கிய தொடர்பில் இருந்த 32 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் சோதனை அறிக்கையின்படி, அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானவர்கள் நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹால், பாத் கோபிள் மற்றும் டெம்பிள்ஸ்டோ பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.