ஒரே பாடசாலையில் 06 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே பாடசாலையில் 06 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

பஸ்பாகேகொரலே சுகாதார பிரிவினரால் நிர்வகிக்கப்படும் நாவலப்பிட்டிய வெஸ்டோல் தமிழ் மகா வித்யாலயாத்தின் ஆறு மாணவர்கள் மற்றும் அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 நபர்களும் நேற்று (13) கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக பொது சுகாதார ஆய்வாளர் சிண்டிரி மோகன் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 9 ஆம் தேதி 15 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். இதனை தொடர்ந்து தரம் 7 மற்றும் 9 இல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள் உட்பட நெருங்கிய தொடர்பில் இருந்த 32 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் சோதனை அறிக்கையின்படி, அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹால், பாத் கோபிள் மற்றும் டெம்பிள்ஸ்டோ பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.