WATCH: யாழில் தீவிரமடையும் போராட்டக்களம்! இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: யாழில் தீவிரமடையும் போராட்டக்களம்! இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுப்பு!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரையிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

$ads={2}

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்று (08) இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.

எனினும், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது வரையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், செ.கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

$ads={2}

இந்நிலையிலேயே, போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.