
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
$ads={2}
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் நானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன்" என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.