இந்தியாவின் தலையீட்டாலேயே யாழ். பல்கலைக்கழக நினைவுச்சின்னம் புனரமைப்பு இடம்பெற்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவின் தலையீட்டாலேயே யாழ். பல்கலைக்கழக நினைவுச்சின்னம் புனரமைப்பு இடம்பெற்றது!

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட பின்னர் இந்தியா தலையிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட மறுநாளே, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக 'தி இந்து' செய்தித் தளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

பிரதமரின் ஊடக செயலாளரை மேற்கோள்காட்டி குறித்த செய்தித் தளம் இதை வெளியிட்டுள்ளது.

நினைவுச்சின்னம் இடிக்கப்படுவது தென்னிந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்து நினைவுச்சின்னத்தின் புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார் என்றும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.