முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் இராஜினாமா!

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் தம் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பான இராஜினாமாக் கடிதத்தினை கடந்த ஜனவரி 1ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார்.

$ads={2}

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வருட காலப் பகுதியில் இந்த திணைக்களத்தினை மக்களின் காலடியில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கொரொனா முடக்கத்திற்கு மத்தியில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை இவரின் ஆலோசனையின் பிரகாரம் முதற் தடவையாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

அது மாத்திரமல்லாமல், சூபி மற்றும் தரீக்கா பிரிவினரை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கையினை இவர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் இலங்கையின் அடையாளம் மற்றும் முஸ்லிம்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் உதவி பணிப்பாளரொருவரின் கீழ் அதற்காக தனி பிரிவொன்றினை உருவாக்கியமை முக்கிய விடயமாகும்.

விடியல் - டிப்தி அலி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.